உள்ளூர் செய்திகள்

கலாக்காய்.

கலாக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டும் நாகை விவசாயி

Published On 2022-09-23 08:00 GMT   |   Update On 2022-09-23 08:00 GMT
  • மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
  • பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கண்டுள்ளார்.

நாகப்பட்டினம்:

மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய கலாக்காயை சோதனை முறையில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டும் நாகை விவசாயிமலையடிவார பகுதிகளில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.

இவை ஊறுகாய் தயாரிப்ப தற்கும், பேக்கரி களிலும் அதிகமாக பயன்ப டுத்தப்படுகிறது.

தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கை நல்லூரில் சந்திரபோஸ் என்ற பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது கொத்து கொத்தாக அதிக விளைச்சல் கண்டுள்ளது.

இதை பறித்து பரவை சந்தை நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ கலாக்காய் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.

இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

இதனால் அதிக லாபம் தருவதாக விவசாயி சந்திரபோஸ் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.

Tags:    

Similar News