உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை சூறையாடிய கும்பல்

Published On 2022-09-03 09:56 GMT   |   Update On 2022-09-03 09:56 GMT
  • பண்ருட்டி ஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது.
  • அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்தினர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டிஒன்றியம் மேல்மாம்பட்டு ஊராட்சி தெற்கு மேல்மாம்பட்டில் சமுதாயகூடத்தில் ஊராட்சிஅலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தினுள் புகுந்த அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அங்கு இருந்த கொடி கம்பம், அறை கதவு, பூட்டு ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினர். தகவல்அறிந்ததும்அங்கு விரைந்து சென்ற பஞ்சாயத்து தலைவர் முத்துலிங்கம், துணைத் தலைவர் ராமசாமி ஆகி யோர் காடாம்புலியூர் போலீசில் புகார் கொடு த்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஊரா ட்சி அலுவலகத்தில் புகுந்து கொடி கம்பம் கதவுகளை அடித்துஉடைத்து சேதப்படுத்திய தெற்கு மேம்பாம்பட்டு கிராம த்தைச் சேர்ந்த 3 பேரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News