நாகையில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
- குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை.
- பல்வேறு பிரத்தியேக உபகரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகையில் மாற்றுத்திற னாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடை பெற்றது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டாரவள மையம் சார்பாக 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்தி றனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மருத்துவ முகாம் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி குழந்தைகள் பங்கேற்றனர். மருத்துவ முகாமில் 6 மருத்துவர்களை கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.
குறிப்பாக கலந்து கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச பேருந்து அட்டை, அதி நவீன மருத்துவ உபகரணங்கள், மாத பராமரிப்பு உதவி தொகை, கல்வி தொகை போன்ற உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஈசிஜி, பல் மருத்துவம், காது குறைபாடுகளை எளிதில் கண்டறியும் ஆடியோ மெட்ரிக் முறை, மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது பல்வேறு பிரத்தியேக உபகரணங்கள் கொண்டு முகாம் நடைபெற்றது.