உள்ளூர் செய்திகள்
பெண்ணையாற்றங்கரையோரம் அழுகிய நிலையில் ஆண் பிணம்
- தென்பெண்னை ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது.அங்கே, அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
- நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர்,
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு கஸ்டம்ஸ் சாலை பகுதியில் தென் பெண்ணையாறு உள்ளது. ஆற்றின் கரையோரமாக இருந்த முட்புதர் அருகில் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த போது அடையாளம் தெரியாத ஆண் பிணம் அழுகிய நிலையில் இருந்தது.
இத்தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த நிலையில் இருந்த ஆண் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? கொலை செய்யப்பட்டு ஆற்றில் கரையோரம் தூக்கி வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.