உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அருகே சொந்த வயலில் நாற்று நட்டவரை தட்டி கேட்டவருக்கு அடி, உதை

Published On 2022-11-10 14:27 IST   |   Update On 2022-11-10 14:27:00 IST
  • நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
  • நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

புதுச்சேரி:

காரைக்கால் அருகே திருநள்ளாறு சேத்தங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் நா ராய ணமூர்த்தி(வயது57). இவர், தனக்கு சொந்தமான வயல் ஒன்றை கடந்த 17 ஆண்டுகளுக்கு முன், அதே ஊரைச்சேர்ந்த ராஜே ந்திரன்(48) என்பவருக்கு ரூ.5 ஆயிரத்திற்கு அடகு வைத்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், பணத்தை திருப்பி கொடுத்து, நிலத்தை கேட்கும் போது, ராஜேந்திரன் நிலத்தை தரமறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நாராயணமூர்த்தி இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ரா ஜேந்திரன் சம்பந்தப்பட்ட நிலத்தில் நாற்று நட்டதாக கூறப்படுகிறது.

விபரம் அறிந்த நாராயணமூர்த்தி, வயலுக்கு சென்று தட்டி கேட்டபோது, வயலில் கிடந்த குச்சி ஒன்றால் ராஜேந்திரன் நாராய ணமூர்த்தியை தாக்கி யுள்ளார். தொடர்ந்து, ராஜேந்திரனின் அண்ணன் சந்திரசேகரர்(50), அவரது மகன் தினேஷ்(26) ஆகிய 2 பேரும் சேர்ந்து நாராயணமூர்தியை தாக்கி யதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த நாராயணமூர்த்தி, திருநள்ளாறு தேனூர் ஆஸ்ப த்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்கால் ஆஸ்ப த்திரியில் சேர்கப்ப ட்டார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், திருநள்ளாறு போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News