உள்ளூர் செய்திகள் (District)

காரைக்கால் திரு.பட்டினத்தில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில் கடத்தியவர் கைது

Published On 2023-08-08 07:28 GMT   |   Update On 2023-08-08 07:28 GMT
  • 200 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
  • காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டிலை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் எல்லையில், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 200 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ரூ.55 ஆயிரம். தொடர்ந்து நடத்திய விசாரணையில், நாகை மாவட்டம் பனங்குடி சமத்துவ புரத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 48) என்பதும், காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு மது பாட்டிலை விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து மகாலிங்கத்தை போலீசார் கைது செய்து, மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைத்தை யும் காரைக்கால் மாவட்ட கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News