உள்ளூர் செய்திகள்

தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.

பண்ருட்டி அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு எரிந்து நாசம்

Published On 2022-10-06 08:18 GMT   |   Update On 2022-10-06 08:18 GMT
  • பண்ருட்டி அருகே மின்கசிவால் கூலித்தொழிலாளி வீடு எரிந்து நாசமாயின.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர்.

கடலூர்:

பண்ருட்டி அருகே திருவாங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி கூலித்தொழிலாளி. இன்று காலை வழக்கமாக வீட்டில் இருந்து அனைவரும் கூலி வேலைக்காக சென்று விட்டனர். அப்போது வீட்டில் எதிர்பாராதமாக மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்து ஏரிய தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த தீ மலமல வென பரவி வீடு முழுவதும் எரிந்தது. இதைப் பார்த்த அருகில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணமூர்த்திக்கும், பண்ருட்டி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு வீரர்கள், ஜமுனா ராணி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கும் பரவாமல் போராடி அணைத்தனர். இந்த விபத்தில் கிருஷ்ணமூர்த்தியின் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்தது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்கிரையான வீட்டை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News