உள்ளூர் செய்திகள்

தலைவாசல் அருகே டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து.

தலைவாசல் அருகே டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து

Published On 2023-04-16 08:18 GMT   |   Update On 2023-04-16 08:18 GMT
  • சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
  • அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பகுதிக்கு ஆத்தூரிலிருந்து தலைவாசலுக்கு சேலம் -சென்னை நான்கு வழிப் பாதையில் 4 -ம் நம்பர் அரசு டவுன் பஸ் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது மணி விழுந்தான் என்னும் இடத்தில் அரசு பேருந்தின் டயர் மிகவும் மோசமாக இருந்ததால் டயர் வெடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விபத்துக்கள் எதுவும் இல்லாமல் சாலையின் ஓரமாக பேருந்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் பேருந்தில் பயணிகள் அனைவரும் கீழே இ அந்த பேருந்தில் டயர் மாற்றுவதற்கான ஸ்டெப்னி டயர் இல்லாததால் மாற்று பேருந்து 31 -ம் நம்பர் பேருந்து வரவழைக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெப்னி டயரை பயன்படுத்தினார்கள். பின்னர் பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தின் ஏற்றி தலைவாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு பேருந்தில் ஸ்டெபி டயர் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரமாக சாலையிலேயே பயணிகள் அனைவரும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News