உள்ளூர் செய்திகள்

ஆப்பக்கூடல் பகுதியில் ஓட்டலில் தீ விபத்து

Published On 2023-07-10 15:33 IST   |   Update On 2023-07-10 15:33:00 IST
  • ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள, மளவென பிடித்து தீ மற்ற இடங்களிலும் பரவ தொட ங்கியது. இது குறித்து பவானி தீய
  • தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தாக விசாரணயில் தெரிய வந்தது.

பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கூத்தாடியூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவர் ஆப்பகூடல்- பவானி மெயின் ரோட்டில் தகர செட் மற்றும் தென்னை ஓலையிலான ஒரு ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு இரு ந்தது.

இந்த நிலையில் இந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள, மளவென பிடித்து தீ மற்ற இடங்களிலும் பரவ தொட ங்கியது. இது குறித்து பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

இதையடுத்து தீ அணைப்பு துறை நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொட ர்ந்து அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்த னர். இதில் ஓலை கொட்ட கை எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தாக விசாரணயில் தெரிய வந்தது. இதில் ஓட்டலில் இருந்த ரேஷன் கார்டு, டி.சி., மார்க் சீட், இட பத்தி ரம் உட்பட பல்வேறு பொரு ட்களும் எரிந்து சேதம் அடைந்தது.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News