உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2023-02-18 14:54 IST   |   Update On 2023-02-18 14:54:00 IST
  • ேமாட்டார் சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
  • மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்தில் ஜெயபால் பலத்த காயம் அடைந்தார்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 58) .

விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் ஆலங்காடு கிராம நிர்வாக அலுவலகம் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலகம் அருகே சற்றுதூரத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறியதில் கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த ஜெயபால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சை க்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபால் உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகன் சதிஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News