உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே மனைவியுடன் தகராறில் விவசாயி தற்கொலை

Published On 2023-07-15 09:02 GMT   |   Update On 2023-07-15 09:02 GMT
  • செல்வகுமாருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது.
  • விஷம் குடித்த செல்வகுமாரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது53). விவசாயி. இவருக்கு சொந்தமான வீடு வள்ளியூர் சமத்துவபுரத்தில் உள்ளது. இதனை அவர் விற்பனை செய்தார்.

இதுசம்பந்தமாக அவருக்கும், அவரது மனைவி மாரியம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த செல்வகுமார் கடந்த 5-ந் தேதி விஷம் குடித்தார். இதனால் மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News