உள்ளூர் செய்திகள்

காரைக்காலில் ெரயில் மோதி மாற்றுத்திறனாளி பலி

Published On 2023-01-13 07:05 GMT   |   Update On 2023-01-13 07:05 GMT
  • தங்கபிரகாசம் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி.
  • ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நிரவி நடுகளம் பேட்டையை சேர்ந்த வர் தங்கபிரகாசம் (வயது45). கூலி தொழிலாளி. இவர் காது கேட்காமல், வாய் பேசமுடியாத மாற்றுத்திற னாளி. கடந்த சில மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில் ெரயிவே ட்ராக்கில் தங்கபிரகாசம் நடை பயிற்சி செய்தார். அப்போது பின்னால் வந்த ெரயிலை கவனிக்கவில்லை. இதனால் ெரயில் தங்கபிரகாசம் மீது மோதியது. இதில் அதே இடத்தில் தங்கபிராசம் உயிர் இழந்தார். இது குறித்து, அவரது மகன் ஆல்பர்ராஜ் பட்டினம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News