உள்ளூர் செய்திகள்

பாலத்தில் உள்ள ஆபத்தான பள்ளம்.

ஒட்டன்சத்திரம் அருகே சாலையில் விபத்தை ஏற்படுத்தும் ஆபத்தான பள்ளம்

Published On 2023-07-12 12:33 IST   |   Update On 2023-07-12 12:33:00 IST
  • இந்த சாலையில் அதிக அளவில் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன. அதிவேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
  • அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை ஊராட்சி பூஞ்சோலை தெற்கு சின்னகரட்டுப்பட்டி, பெரியகரட்டுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிக அளவில் டிப்பர் லாரிகள் வந்து செல்கின்றன.

அதிவேகமாக வரும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் பள்ளத்தில் சிக்கி இரவு நேரத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பைக்குகளில் செல்பவர்கள் அதிக அளவில் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைகின்றனர். டிப்பர் லாரிகளால் சாலை தொடர்ந்து சேதம் அடைந்து வருகிறது.மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News