உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே நாட்டு வெடி வெடித்து மாட்டின் வாய்க்கிழிந்தது

Published On 2023-05-22 08:55 GMT   |   Update On 2023-05-22 08:55 GMT
  • கோவிந்தன் மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்
  • வெடி மருந்தினை பசுமாடு கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கோவிந்தன்(55) இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்புகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை ஒழிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி மருந்தினை பசுமாடு கடித்தது கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது. பன்றிகளை கொல்ல வைத்த வெடியை மாடு கடித்த போது மாட்டின் வாய் சிதறி ரத்தம் கொட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News