உள்ளூர் செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி பசு மாடு பலி

Published On 2023-03-01 09:14 GMT   |   Update On 2023-03-01 09:14 GMT
  • லோகநாதன் கார் டிரைவர் மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது.
  • விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது.

கள்ளக்குறிச்சி:

திருவண்ணாமலை சேர்ந்த லோகநாதன் கார் டிரைவர். இவர் ஈரோட்டில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் சென்றார். மாம்பாக்கம் ெரயில்வே மேம்பாலம் அருகே சென்ற போது சென்டர் மீடியன் அருகி 2 மாடுகள் சாலையை கடந்தன. அப்போது டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடுகள் மீது மோதியது. இதில் கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.

மேலும், விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு மாடு இறந்துவிட்டது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

Similar News