உள்ளூர் செய்திகள்

வடலூர் அருகே விஷம் குடித்து கட்டிட ெதாழிலாளி தற்கொலை

Published On 2023-01-11 12:54 IST   |   Update On 2023-01-11 12:54:00 IST
  • வடலூர் அருகே விஷம் குடித்து கட்டிட ெதாழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
  • இவருக்கு, குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

கடலூர்:

வடலூர் அருகே உள்ள தென்குத்து பிதாநகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 41). இவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு, குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது, இதனால் இவருக்கும், இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இருவருக்கு சண்டை ஏற்பட்டதால், மனமுடைந்த சந்தோஷ்குமார், விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை அறிந்த உறவினர்கள், வடலூர் தனியார் ஆஸ்பத்திரியில், சேர்ந்தனர், பின்னர், மேல்சிகிச்சைக்காக, கடலூர் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர், அங்கு சந்தோஷ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், சந்தோஷ்குமார், முன்னதாக இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து புகாரி ன்பேரில் வடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள், 

Tags:    

Similar News