கோவையில் காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி
- வாலிபருடனான காதலை கைவிடுமாறு மாணவிக்கு பெற்றோர் அறிவுரை கூறினர்.
- பெற்றோர் மகளை கண்டுபிடித்து தரும்படி முடீஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீசை சேர்ந்த 26 வயது வாலிபர்.
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லார் எஸ்டேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு மாணவிக்கு அறிவுரை கூறினர். இதுகுறித்து அவர் தனது காதலனிடம் தெரி வித்தார். உடனடியாக வாலிபரின் தந்தை மாணவியின் வீட்டிற்கு சென்று தங்களது மகனுக்கு பெண் கொடுக்குமாறு கேட்டனர்.
ஆனால் அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
தங்களது மகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டுபிடித்து தரும்படி முடீஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகி றார்கள்.