உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தில் குண்டுவெடிக்கும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட கல்லூரி மாணவர்-வாலிபர் கைது

Published On 2023-06-15 12:52 IST   |   Update On 2023-06-15 12:52:00 IST
  • கைதான இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர்.
  • காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் இறந்த பின்னர் இவரது ஆதரவாளர்கள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ரவுடி ஸ்ரீதர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ரீதரின் படத்துடன் போலீஸ் நிலையங்களை குண்டுவைத்து தகர்க்கப் போவதாக பதிவிட்டு இருந்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் புவனேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட உழகோல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (19), மற்றும் அவருக்கு முகநூல் பக்கத்தில் பதிவை வெளியிட உதவிய கிதிரிப் பேட்டை கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோகித் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இருவரும் பா.ம.க.வில் நிர்வாகிகளாக உள்ளனர். இதுதொடர்பாக காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News