உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

செம்பட்டி அருகே குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

Published On 2022-12-02 05:40 GMT   |   Update On 2022-12-02 05:40 GMT
  • தான் வேலை செய்யும் இடத்திற்கு தனது 2 பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
  • அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

செம்பட்டி:

செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது25) . கூலி தொழிலாளி.

இவரது மனைவி பவித்ரா (21) குழந்தைகள் கனிஷ்காஸ்ரீ (4) ஹர்ஷிதாஸ்ரீ (1½). பவித்ரா நரசிங்கபுரம் அருகே சித்தைன்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பவித்ரா உட்பட 7 பெண்கள் அங்கு தேங்காயில் பருப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா தனது 2 பெண் குழந்தைகளையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதாஸ்ரீ குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News