உள்ளூர் செய்திகள்
காதல் திருமணம் செய்த மனைவியை தாக்கி மிரட்டிய கணவர் மீது வழக்கு.
- கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- தனது மனைவி எழிலரசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தினார்.
கடலூர்:
கடலூர் அருகே செல்லஞ்சேரி சேர்ந்தவர் பாவாடை ராயன். இவரது மனைவி எழிலரசி (வயது 28). இவர்கள் கடந்த 6 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று பாவடைராயன் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி எழிலரசியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.