உள்ளூர் செய்திகள்

காரைக்கால் அருகே கார் வணிக கடையில் மோதி விபத்து

Published On 2023-04-27 07:04 GMT   |   Update On 2023-04-27 07:04 GMT
  • காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • 2 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

புதுச்சேரி:

திருவாரூர் மாவட்டம் மேனாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது50). இவர் தனது குழந்தைகளுடன், காரைக்காலுக்கு வேலை விசயமாக வந்துவிட்டு, மீண்டும் திருவாரூர் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் கிராமத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது, ரமேஷுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கார் திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடையில் மோதி நின்றது.

இந்த விபத்தில், கார் மற்றும் கடை வாசலில் நிறுத்தியிருந்த 2 மோட்டார் சைக்கிள் சேதமானது. மேலும், கார் டிரைவர் ரமேஷ், கடை உரிமையாளர் திருவாரூர் நன்னிலத்தைச்சேர்ந்த ஜெயக்குமார்(50) என்பவரும் காயம் அடைந்தனர். தொடர்ந்து, அங்கிருந்தோர்,2 பேரையும் மீட்டு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, ஜெயக்குமாரின் மகன் குருமூர்த்தி, காரைக்கால் போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News