உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மது விற்ற சிறுவன் கைது

Published On 2023-10-11 09:00 GMT   |   Update On 2023-10-11 09:00 GMT
  • பண்ருட்டி அடுத்த திருவாமூர் சிவாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
  • அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கடலூர்:

புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக் டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் திருவாமூர் பகுதியில் தீவிர மது சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த திருவாமூர் சிவாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்த 180மில்லி லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News