உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்

Published On 2022-12-07 08:42 GMT   |   Update On 2022-12-07 08:42 GMT
  • வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார்.
  • தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்.

கடலூார்:

பண்ருட்டி அருகே புலவன்குப்பத்தை சேர்ந்த 14 வயதுசிறுமி வீட்டில் தனியாக இருந்த போது இவரது தந்தையின் நண்பர் பக்கத்து ஊரானகாட்டுக்கூடலூரை சேர்ந்த சோழன்(32 என்பவர் வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல் செய்தார். அதிர்ச்ச்சி அடைந்த சிறுமி அவனை தள்ளிவிட்டு வெளியேஓடி வந்துள்ளார்.

இது குறித்து சிறுமியின்தந்தை பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில்இன்ஸ்பெக்டர்(பெ) நந்தகுமார், மகளிர் சப் இன்ஸ்பெக்டர் சுடர்மதி ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து தலைமறைவான சோழனை தேடி வருகின்றனர்

Tags:    

Similar News