உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்

Published On 2023-11-06 14:30 IST   |   Update On 2023-11-06 14:30:00 IST
  • பொள்ளாச்சி ஆஸ்பத்திரியில் உண்மை தெரிய வந்தது
  • போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து முடிந்து உள்ளார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அவரது உறவினர் மகனாக 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த பிப்ரவரி மாதம் 2 பேரும் பழனிக்கு சென்றனர். பின்னர் அங்கு வைத்து 2 பேரும் திருமணம் செய்தனர். இதனையடுத்து 2 பேரும் செட்டிக்காபாளையத்தில் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். சிறுமிக்கு ரத்த பற்றாக்குறை ஏற்பட்டது. இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

அப்போது டாக்டர்கள் சிறுமியின் வயதை பார்த்த போது அவர் 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது.

பின்னர் டாக்டர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் 17 வயதில் திருமணம் செய்து கர்ப்பமானது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News