உள்ளூர் செய்திகள்

கண்டமங்கலம் அருகே தாயிடம் பால் குடித்த ஆண் குழந்தை மூச்சுத்திணறி பலி

Published On 2022-10-12 08:23 GMT   |   Update On 2022-10-12 08:23 GMT
  • உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயார் வினிதா பால் புகட்டியுள்ளார்.
  • பெற்றோர்கள் குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

விழுப்புரம்: 

 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் போலீஸ் சரகம் மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வினிதா (வயது23). இத்தம்பதிக்கு 2 மாதம் 10 நாட்களேயான ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு வயிற்கு ப்போக்கு ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தாயார் வினிதா பால் புகட்டியுள்ளார். அப்போது மூச்சுத்திணறி குழந்தை மயங்கியுள்ளது.

உடனடியாக பெற்றோர்கள் குழந்தையை கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.அங்கு பரிசோதித்து மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அருண்குமார் கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்,

Tags:    

Similar News