உள்ளூர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இரைச்சலுக்கு நடுவே முட்டையிட்டு அடைகாக்கும் பறவை

Published On 2024-07-11 12:33 IST   |   Update On 2024-07-11 12:33:00 IST
  • பறவை ஓன்று பயப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தது.
  • ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தின் அருகே செல்லும் அடையாறு ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள புல்வெளிகள் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பரப்பில் அதிக அளவில் பறவகைள் வந்து செல்கின்றன.

இப்படி வரும் பறைவைகள் விமான நிலைய ஓடுபாதை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு வகை பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து அமர்ந்து இருக்கும்.

இதனால் ஊழியர்கள் மூலமாக விமானம் ஓடுபாதை அருகே பட்டாசுகள் வெடித்து அதன் சத்தத்தால் பறவைகளை துரத்தும் பணியில் சென்னை விமான நிலைய நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விமான ஓடுபாதைகளை சரிபார்க்கும் பணியும் ஊழியர் ஒருவர் ஈடபட்டார். அப்போது ஓடுபாதை அருகே பறவை ஓன்று பயப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தது.

இதை பார்த்து ஆச்சரியப்பட்ட ஊழியர் அதன் பறவையை அருகில் சென்று பார்த்த போது தரையில் 2 முட்டைகளை அடைகாத்து வருவது தெரிந்தது. இதனை அந்த ஊழியர் தனது செல்போனில் பதிவு செய்தார்.

அந்த பறவை சிவப்பு லாப்விங் வகை பறவை என்பது தெரியவந்தது. இந்த பறவைகள் குறைந்த அடி உயரத்தில் தான் பறக்கும் மேலும். இது உயரமான இடத்திலோ மரங்களிலோ கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சுகள் பொறிக்காது. இது புல்வெளி மற்றும் விவசாய நிலங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.

விமான ஓடு பாதை அருகே விமானங்களின் இரைச்சலுக்கு மத்தியில் பறவை ஒன்று தரையில் முட்டையிட்டு அடைகாத்து வருவது ஊழியர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News