உள்ளூர் செய்திகள்

மீட்கப்பட்ட மலைப்பாம்புடன் வனத்துறையினர்.

பணகுடியில் இன்று காலை தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பு

Published On 2022-11-13 08:50 GMT   |   Update On 2022-11-13 08:50 GMT
  • வெங்கடேசுக்கு சொந்தமான விவசாய தோட்டம் நவரைபத்து பகுதியில் உள்ளது.
  • தோட்டத்தில் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பணகுடி:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஷ்மியாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் அருகே உள்ள நவரைபத்து பகுதியில் உள்ளது. இன்று காலை வெங்கடேஷ் தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு ஒன்று கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு பணகுடியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News