குன்னூர் மார்க்கெட்டில் வாடகை பாக்கி வைத்த 9 கடைகளுக்கு சீல்
- ஒவ்வொரு கடையின் உரிமையாளர்களும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும்
- இந்த 9 கடைகள் மட்டும் சுமார் 1 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
குன்னூர்
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் ஒவ்வொரு கடையின் உரிமையாளர்களும் கடை வாடகையை நகராட்சிக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பலரும் வாடகை செலுத்துவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
அதிகளவு வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ள நகராட்சி வருவாய் துறையினர், கடைகளை சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டில் வாடகை நிலுவை தொகை வைத்துள்ள 9 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த 9 கடைகள் மட்டும் சுமார் 1 கோடி வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதில் 1 கடை மட்டும் சுமார் 40 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ளது.
இது குறித்து கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், மார்கெட் வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தினால் நகராட்சியின் நிதி நிலை சீராகி விடும். நிதி நிலை இல்லாததால் எந்த மக்கள் நல பணியும் செய்ய முடியவில்லை. எத்தனை நாளுக்கு சாலையோர மர ங்களை அகற்றியும் தூய்மை பணிகளை மேற்கொ ண்டும் மக்களை ஏமாற்ற முடியும். குன்னூர் மார்கெட்டில் உள ்வாடகையை ஒழித் து நிலுவை தொகை களை அதிரடியாக வசுல் செய்தால் மட்டுமே குன்னூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றார்.