உள்ளூர் செய்திகள்

கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்.

300 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது

Published On 2023-11-08 09:41 GMT   |   Update On 2023-11-08 09:41 GMT
  • மேலப்படாகை கடைவீதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அடுத்த மேலப்படாகை கடைவீதியில் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்தனர்.

இதில் சுமார் 300 கிலோ கஞ்சா பிடிப்பட்டது.

இது தொடர்பாக 2 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக கீழையூர் போலீசார் வீர முரசு, சசிக்குமார், சுதர்சன், விக்னேஷ், வைரகுமார், முருகானந்தம், ஹரிகிருஷ்ணன், கோபிநாதன் உள்பட 9 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News