உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுனில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-09 09:33 GMT   |   Update On 2023-03-09 09:33 GMT
  • தருண் டவுன் சாப்டர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண்(வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தற்கொலை

இதில் மகள் கல்லணை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தருண் டவுன் சாப்டர் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்கேல்ராஜ் இறந்துவிட்டார்.

இதனால் மேரி தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே அவரது பெற்றோர் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொ டர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தருண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தினர்.

நேற்று தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த தருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News