உள்ளூர் செய்திகள்

பாளை அருகே 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-03-17 14:54 IST   |   Update On 2023-03-17 14:54:00 IST
  • ஸ்ரீரிக்‌ஷியா பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
  • அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஸ்ரீரிக்‌ஷியா உடலை கீழே இறக்கினர்.

நெல்லை:

பாளையை அடுத்த கிருஷ்ணாபுரம் ஜெயஜோதி நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கிருஷ்ணாபுரத்தில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஸ்ரீரிக்ஷியா (வயது 14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

தற்கொலை

ஸ்ரீரிக்ஷியா பாளையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இன்று காலை ஸ்ரீரிக்ஷியா படுத்திருந்த அறை கதவு திறக்கப்படவில்லை.

இதனால் அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். அதனை கண்டு அவரது பெற்றோர் அலறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அவர்கள் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த ஸ்ரீரிக்ஷியா உடலை கீழே இறக்கினர். தகவல் அறிந்த சிவந்திபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News