மது போதையால் தான் 80 சதவீத குற்றச்சம்பவங்கள் - தருமபுரி டி.எஸ்.பி பேச்சு
- சாதி, மதம் இல்லாமல் அனைரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.
- மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங் களில் 80 சதவீதம் மது போதையால் தான் நடை பெறுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் கிரா மத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் பானு பூமணி தலைமை வகித்தார்.
முகாமில், தருமபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி. ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பிரிவு டி.எஸ்.பி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இம்முகாமில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவி அருள்ஞானசேகரன், வட்டாட்சியர் சரவணன், புள்ளியல்துறை ஆய்வாளர் உஷாராணி, ஊராட்சி செயலர் இடும்பன், பசுமை தாயகம் வக்கீல் மாது, ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் மாவட்ட சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பிரிவின் கீழ் பள்ளியில் படிக்கும் மாண வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், உயர்கல்வி சிறப்பு உதவி தொகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் குறித்து விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்க ளுக்கு வழங்கப்பட்டது.
முகாமில் டி.எஸ்.பி. ஜெயக்குமார் பேசும்போது சட்டத்தின் முன் அனை வரும் சமம். உயர்ந்தவர் தாழ்ந்தவர், பணம் படைத்த வர், ஏழைகள் என்று வேற்றுமைகள் இன்றி எல்லோரும் சமத்துவத்துடன் வாழ வேண்டும்.
தன்னடக்கத்தோடு இருக்க வேண்டும். சட்டங் கள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. 27 ஆயிரம் சட்டங்கள் உள்ளன. இதில் இந்திய அரசியல் சட்டம் முக்கியமானது. தீண்டாமை இருக்கக்கூடாது.
சாதி, மதம் இல்லாமல் அனைரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். வார்த்தை களை பார்த்து பேச வேண்டும். அடுத்த நபர்களையும், சாதியை பற்றியும் இழிவாக பேசக்கூடாது. மேலும் மாவட்டத்தில் நடைபெறும் குற்ற சம்பவங் களில் 80 சதவீதம் மது போதையால் தான் நடை பெறுகிறது.
ஆகவே அவற்றை கட்டுப்படுத்த பெண்களின் பங்களிப்பு மிக அவசியம். முடிந்தவரை மதுபோதை யில் இருந்து ஆண்களை மீட்டெடுக்கவும், கட்டுப் படுத்தவும் பெண்களால் மட்டுமே முடியும் என்றார்.