உள்ளூர் செய்திகள்

பாளை தனியார் விடுதியில் 8 மாணவர்களின் செல்போன்கள் திருட்டு

Published On 2023-04-12 09:18 GMT   |   Update On 2023-04-12 09:18 GMT
  • விடுதியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியுள்ளனர்.
  • திருட்டு குறித்து மாணவர்கள் போலீசில் புகார் செய்தனர்.

நெல்லை:

பாளை மகாராஜநகரில் ஒரு தனியார் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அங்குள்ள 8 மாணவர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவர்கள் இது குறித்து ஐகிரவுண்டு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன்களை திருடியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News