உள்ளூர் செய்திகள்

பாண்டியன் லாவகமாக பாம்பு பிடித்தார்.

சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த 8 பாம்புகள் பிடிப்பட்டது

Published On 2022-11-20 09:31 GMT   |   Update On 2022-11-20 09:31 GMT
  • மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.
  • பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது.

8 நாட்கள் கடந்தும் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.

மழை மற்றும் மழைநீர் தேங்கியதால் விளைநிலங்கள் மற்றும் புதர்களில் இருந்த பாம்புகள் அருகில் உள்ள வீடுகள் மற்றும் தோட்டங்களில் தஞ்சமடைந்துள்ளது.

சீர்காழி, தொடுவாய், வைத்தீஸ்வரன் கோவில், திருநகரி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், தோட்டங்களில் அடுத்தடுத்து தஞ்சமடைந்த கொடிய விஷம் கொண்ட நாகம், கோதுமை நாகம், கருநாகம் உள்ளிட்ட 8 பாம்புகளை பாம்பு பிடிக்கும் வீரரான சீர்காழி பாம்பு பாண்டியன் லாவகமாக பிடித்து மக்கள் நடமாட்டம் அற்ற வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் பாதுகாப்பாக விட்டார்.விஷம் கொண்ட பாம்புகள் பிடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags:    

Similar News