உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகாத 8 பேர் கைது

Published On 2022-07-03 08:01 GMT   |   Update On 2022-07-03 08:01 GMT
  • திண்டுக்கல் தாலுகா பகுதியில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் சிலர் இருந்தனர்.
  • பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் தாலுகா பகுதியில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் சிலர் இருந்தனர்.

அவர்களை உடனடியாக கைது செய்ய நீதிபதி பிரியா உத்தரவிட்டார். அதன்பேரில் உதவிபோலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் அறிவுறுத்தலின்படி தாலுகா இன்ஸ்பெக்டர் பாலாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பூபாலகார்த்திக்(25), மாரி(35), அசோக்(25), சரவணன்(40), கண்ணன்(38), குணசேகரன்(49), வடிவேல்(60), ராஜராஜன்(30) ஆகியோர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பது தெரியவந்தது.

அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News