உள்ளூர் செய்திகள்

கோவையில் 7-ம் வகுப்பு மாணவர் மாயம்

Published On 2023-03-13 09:35 GMT   |   Update On 2023-03-13 09:35 GMT
  • திருப்பதி கோவை ராஜவீதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான்.
  • திருப்பதி அதன் பிறகு பள்ளிக்கு திரும்பவில்லை.

கோவை,

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் சின்னான். தற்போது திருச்சியில் வசிக்கிறார். இவரது மகன் திருப்பதி (வயது 13). கோவை ராஜவீதியில் உள்ள பள்ளியில் விடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மாதம் 24-ந் தேதி காலை பள்ளி வகுப்பறையில் வெளியே சென்ற திருப்பதி அதன் பிறகு பள்ளிக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உக்கடம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் திருப்பதியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News