உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம் பேரூராட்சியில் 74வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Published On 2023-01-26 15:18 IST   |   Update On 2023-01-26 15:18:00 IST
  • மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 74-வது குடியரசு தினவிழா தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது.
  • வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி போட்டோவிற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் மலர்தூவி வணங்கினார்கள்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் இன்று காலை 74-வது குடியரசு தினவிழா தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது. அலுவலக கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி போட்டோவிற்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் மலர்தூவி வணங்கினார்கள்.

பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் வரவேற்று, இனிப்புகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

Tags:    

Similar News