உள்ளூர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கொரோனா

Published On 2022-07-06 09:33 GMT   |   Update On 2022-07-06 09:33 GMT
  • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
  • தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

அந்த வகையில் இன்று மாவட்டத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டதில் புதிதாக 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மாநகர பகுதியில் 14 பேரும், அம்பையில் 12 பேரும், சேரன்மகாதேவியில் 11 பேரும், களக்காடு, பாப்பாக்குடியில் தலா 7 பேரும், நாங்குநேரி. ராதாபுரத்தில் தலா 6 பேரும், மானூர், பாளையில் தலா 2 பேரும், வள்ளியூரில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News