உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தேனி அருகே பெண்கள், ஆசிரியர் உள்பட 6 பேர் மாயம்

Published On 2023-07-29 12:54 IST   |   Update On 2023-07-29 12:54:00 IST
  • கூலித்தொழிலாளி, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர் உள்பட 6 பேர் மாயமாகினர்.
  • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே பூதிப்புர த்தை சேர்ந்தவர் ராம்தாஸ் (வயது63). கூலித்தொழி லாளி. சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார்.

இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து முதியவரை தேடி வருகின்ற னர்.

பழனிசெட்டிபட்டி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி புவனேஸ்வரி (34). மகள்கள் பவித்ரா (13), கிருபா (12), சம்பவத்தன்று ரவிக்குமார் வேலைக்கு சென்று விட்டார். மாலை வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகள்கள் மாயமாகி இருந்தனர். செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்ப ட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் கிடைக்காததால் பழனி செட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே கும்பக்கரை பிரிவு பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி மனைவி கோகிலா (21). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர்.

இந்த நிலையில் கோகிலா திடீரென மாயமானார். அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கா ததால் பெரியகுளம்

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வீராச்சாமி (55). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்தபோது விடுமுறை என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி லட்சுமி பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதான ப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீராச்சாமியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News