உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை நகராட்சி ஆணையர் பார்வையிட்டார்.

50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2023-11-21 09:59 GMT   |   Update On 2023-11-21 09:59 GMT
  • கடைகளில் இருந்து மொத்தம் ரூ.1,600 அபராதம் விதிக்கப்பட்டது.
  • பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள் அரசு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு வழங்கப்படுகிறதா, விற்கப்படுகிறதா என நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் அறிவுறுத்தலையின்படி நகராட்சி பணியாளர்கள் உதவியோடு நகரின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்ப ட்டது.

பல்வேறு கடைகளில் 50 கிலோ நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1600 அபராதம் விதிக்க ப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பைகள நகராட்சி வளாகம் கொண்டு வரப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

இளநிலை உதவியாளர் பாபு, பணி மேற்பார்வையாளர் கலிய பெருமாள், பரப்புரையாளர் அலெக்ஸாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News