உள்ளூர் செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் கைது

Published On 2022-10-22 09:24 GMT   |   Update On 2022-10-22 09:24 GMT
  • கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் அண்டோ (எ) பன்னீர்செல்வம் 25/22, த/பெ. பலராமன், ஜோதி அண்ணாமலை நகர், சென்னை, அர்ஜுன் 26/22, த/பெ. அசோகன் வியாசர்பாடி, சென்னை, நெட்ட சக்தி (எ) சக்திவேல்20/22, த/பெ. ரமேஷ், வியாசர்பாடி, சென்னை, வில்லன் காசி என்கிற காசி28/22, த/பெ. முனுசாமி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை, ஜில்லா சுசி என்கிற சுசீந்தர் 24/22, ஆகிய இருவரும் தகப்பனார் வெங்கடேசன், சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு உள்ளது.

இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் பரிந்துரையின்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News