உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 5 பேர் கைது

Published On 2022-10-26 08:56 GMT   |   Update On 2022-10-26 08:56 GMT
  • போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர்.
  • கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் உலகுடையாம்பட்டு, குளத்தூர், விரியூர், ஊராங்காணி ஆகிய கிராமங்களில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை, வயல்வெளி, வீடுகளின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்ததாக சிவபுரம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை (32), குளத்தூரை சேர்ந்த பட்டம்மாள் (50), விரியூரை சேர்ந்த ஜான் கென்னடி (36), குரும்பாலூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் (22), ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த வேலு (50) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 450 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News