உள்ளூர் செய்திகள்
கூடங்குளத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
- கூடங்குளம் காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- விசாரணையில் அவர்கள் சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
கூடங்குளம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு சூதாடிக்கொண்டிருந்த 5 பேரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் கூடங்குளத்தை சேர்ந்த சித்திரைபாண்டி(வயது 45), ஜெயக்குமார்(48), குமார், அருள், குமரேசன் என்பதும், அவர்கள் சீட்டு விளையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.5,180 பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.