உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்ற 5 பேர் கைது

Published On 2023-07-29 15:28 IST   |   Update On 2023-07-29 15:28:00 IST
  • கஞ்சா விற்பனை செய்த 5 பேரை கைது செய்தனர்.
  • 850 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்த பேளகொண்டப்பள்ளி அனுகாஷ் மாரண்ணா (24), ஓசூர் சின்ன எலசகிரி ரஞ்சித் குமார் (27), ஓசூர் காமராஜ் நகர் மனோஜகுமார் (27), தேன்கனிக்கோட்டை தாலுகா சாதனைப்பள்ளி ஹரீஷ் (22), தேவகானப்பள்ளி அருகே உள்ள தோகரை அக்ரஹாரம் பிரகாஷ் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 850 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8,500 ஆகும்.

Tags:    

Similar News