உள்ளூர் செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்து - மதுரவாயலில் பரபரப்பு

Published On 2023-06-05 20:02 GMT   |   Update On 2023-06-05 20:02 GMT
  • மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.
  • விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை:

சென்னை மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்தில் சிக்கியது.

நின்று கொண்டிருந்த லாரி மீது கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்து மோதியது. அதன்பின், ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதியது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News