உள்ளூர் செய்திகள்
தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்து - மதுரவாயலில் பரபரப்பு
- மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானது.
- விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை:
சென்னை மதுரவாயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதி விபத்தில் சிக்கியது.
நின்று கொண்டிருந்த லாரி மீது கச்சா எண்ணெய் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்து மோதியது. அதன்பின், ஒன்றன்பின் ஒன்றாக 4 லாரிகள் மோதியது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் கூடி தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.