உள்ளூர் செய்திகள்

164 பேரிடம் ரூ.7 கோடி மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2023-03-25 10:37 GMT   |   Update On 2023-03-25 10:37 GMT
  • கணேசபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார்.
  • 164 முதலீட்டாளர்களிடம் ரூ. 6 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 579 வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.

நாமக்கல்:

நாமக்கல்லில் உள்ள துறையூர் சாலையில் நகராட்சி மன்றம் அருகே கணேசபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். அந்த நிறுவனம் 6 விதமான செல்போன் முதலீடு திட்டங்கள் இருப்பதாக கூறி வாடிக்கையா ளர்களிடம் பணத்தை வசூல் செய்தது.

இந்த நிலையில் குறித்த நேரத்தில் பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் மீது புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த காளியப்பன் என்பவர், நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் கொடுத்தார்.

அதில் அந்த தனியார் நிறுவனத்தில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மே மாதம் 27-ந் தேதி வரை 12 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததா கவும், இதில் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை திரும்பத் தராமல் செந்தில்குமார் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார்.

இது குறித்து பொருளா தார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில், செந்தில்குமார், அழகர், ராமச்சந்திரன், தேவி, மணி, லாயா என்கிற சசிகலா, கார்த்திக், கனகா, ஆறுமுகம் மற்றும் பிரபாகரன் உட்பட சிலர் 164 முதலீட்டாளர்க ளிடம் ரூ. 6 கோடியே 93 லட்சத்து 54 ஆயிரத்து 579 வசூல் செய்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட கார்த்தி, கனகா, ஆறுமுகம், பிரபாகரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 6 பேரை கைது செய்ய சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News