உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது
- களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் நேற்று குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர்.
- போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் நேற்று குடில்தெரு பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது 4 பேர், சிறுவர்களுக்கு ஏதோ விற்பனை செய்து கொண்டி ருந்தனர். போலீசாரை பார்த்ததும் சிறுவர்கள் மற்றும் 4 பேரும் தப்பி ஓடினர். போலீசார் விரட்டி சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில் அவர்கள் களக்காடு தெப்பக்குளத் தெருவை சேர்ந்த கொம்பையா (வயது22). கலுங்கடி நடுத்தெருவை சேர்ந்த செல்வசகாயம் (18), கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த ஐசக் (18), ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து (32) என்பதும், 4 பேரும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 30 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.