உள்ளூர் செய்திகள்
கஞ்சா சாக்லேட் விற்ற 4 பேர் கைது
- ஒரு பெட்டி கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரிய வந்தது.
- மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா 600 கிராம் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெங்களூர் சாலையில் ரோந்து பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள ஒரு பெட்டி கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இந்த கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ராம்நகர் சேர்ந்த கந்தன் (வயது 32), மத்திகிரி கணேஷ் மேத்தா(38), சுப்பிரமணி காலனி ஜமீர் (34), வாசவி நகர் சபரீசன்(36)ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா 600 கிராம் பறிமுதல் செய்தனர்.