உள்ளூர் செய்திகள்
பந்தலூரில் பேரணி நடத்திய காங்கிரசார் 34 பேர் கைது
- காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பந்தலூர்,
ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நெல்லியாளம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் ஷாஜி தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் செயலாளர் அனஸ் ஏடாலாத் பேரணியை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அனுமதியின்றி கண்டன பேரணி நடத்தியதாக சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி எலியாஸ் உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.