உள்ளூர் செய்திகள்
ஆலங்குளத்தில் பூட்டிய வீட்டில் பித்தளை பொருட்கள் திருடிய 3 வாலிபர்கள் கைது
- வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
- சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 51). சம்பவத்தன்று இவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பித்தளை பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிரா வில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் திருட்டில் ஈடு பட்டவர்கள் ஆலங்குளம் அருகே புதுப்பட்டியை சேர்ந்த முத்துராஜ்(31), பிள்ளையார்குளத்தை சேர்ந்த ராம் கார்த்திக்(30), ஆலங்குளம் காந்திநகரை சேர்ந்த பிரபாகரன்(33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.